வேலூர் :
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வ.உ.சி நகர் அருகே உள்ள ராஜாகோட்டை மலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. வெயிலின் காரணமாக மலையில் காய்ந்திருந்த புற்களால் தீ மள மளவென மலை முழுவதும் பரவியது.
இதனால் வானை முட்டும் அளவிற்கு புகைமண்டலம் சூழ்ந்தது. இதில் புளிய மரம், கொய்யா மரம், வேப்பமரம் மற்றும் ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின. வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளும், மாடுகளும் மலைப் பகுதியில் உள்ளதால், தீயில் அவைகளும் எரிந்து கருகி இருக்கலாம் என கால்நடை உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர்.
இயற்கையாக தீ ஏற்பட்டதா அல்லது காடுகளுக்கு யாராவது சமூக விரோதிகள் தீ வைத்தனரா ? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தீ வைக்கும் கும்பலை வனத்துறையினர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





