அகில இந்திய அண்ணா கலைஞர் தொழிலாளர் நல சங்கத்தின் சமூக சேவகர் மாநிலத் தலைவர் பக்ரீத் கான் கல்வித்தந்தை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கும் காலை உணவு வழங்கினார். அந்த நாள் முழுவதும் அந்த பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக பேசி கலந்துரையாடினார் அதன் பின்பு அவர் பிள்ளைகளோடு சேர்நது 250 பல வகையான மரங்கன்றுகளை நட்டார். அந்த பிள்ளைகள் சமூக சேவகர் பக்ரீத் கானின் வருகையால் மகிழ்ச்சியடைந்தனர். மாலையில் அவர் பிள்ளைகளுக்கு இனிப்புகளை வழங்கிய பின்பு அவர் விடைபெற்றார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





