சர்வதேச டி20 கிரிக்கெட்; சாதனை பட்டியலில் இணைந்த சூர்யகுமார் யாதவ்

கயானா:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.
3 வது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, சூர்யகுமார் யாதவ் 83 ரன், திலக் வர்மா 49 ரன் (நாட் அவுட்) ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர் சூர்யகுமார் யாதவ். இவர் ரோகித், கோலியுடன் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் 44 பந்தில் 83 ரன் அடித்தார். இதில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும்.
சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்தில் 4 சிக்சர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 100 சிக்சர்கள் அடித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இரு இடங்களில் ரோகித் சர்மா (182 சிக்சர்), விராட் கோலி (117 சிக்சர்) உள்ளனர். சூர்யகுமார் யாதவ் (101 சிக்சர்) 3வது இடத்திலும், கே.எல்.ராகுல் (99 சிக்சர்) 4வது இடத்திலும் உள்ளனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சர்வதேச டி20 கிரிக்கெட்; சாதனை பட்டியலில் இணைந்த சூர்யகுமார் யாதவ்

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட