பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தலைமையில் நேற்று (28.08.2023) ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உயர்நீதிமன்ற ஆணையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடிய இடங்கள் மற்றும் விற்பனை செய்யக்கூடாத இடங்களைத் தேர்வு செய்து, பின்னர் இறுதி முடிவு எடுப்பது குறித்தும், சாலையோர வியாபாரிகளுக்கான நலன்களை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா, இ.ஆ.ப., போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் (கிழக்கு) சமே சிங் மீனா, இ.கா.ப., மாநகர வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் கோ.கோபி, உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






