சென்னை.
சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 3 நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல்அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024னை முன்னிட்டு, கிண்டி,அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும்,இராணி மேரி கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ள வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், லயோலா கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ள மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,அவர்கள்,சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்,ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த ஆய்வுகளின்போது, இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையாளர்கள் எம்.பி.அமித்,கட்டா ரவி தேஜா,கே.ஜெ.பிரவீன்குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மண்டல அலுவலர், மாநகராட்சி மற்றும் காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





