சென்னை கனமழை: 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து…

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதன் காரணமாக 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்த கனமழையால் பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மாலை 6.05 மணிக்கு, திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது.

இன்று மாலை 4.35 மணிக்கு, சென்னை சென்ட்ரலில் இருந்து செல்ல வேண்டிய திருப்பதி செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 9.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து, மைசூரு செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை கனமழை: 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.