சென்னை:
சமூக ஊடகங்களில் ஒரு பெண் மதுபோதையில் ரகளையில் ஈடுபடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதாவது சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் நேற்றிரவு (வியாழக்கிழமை) சென்றுள்ளார். அப்போது, அந்த பெண் கடுமையான மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது திடீரென அவர் சாலையின் நடுப்பகுதியை நோக்கி ஓடியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தனது காலால் எட்டி உதைத்தார். இதனை தட்டிக்கேட்ட அப்பகுதி மக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
பெண்ணின் இந்த அநாகரிகமான செயலால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு தட்டிக்கேட்டனர். இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த ஒருவர் அந்த பெண்ணின் தலையில் பலமுறை அடித்தார். இந்த மோதல் தொடர்பான காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களிலும் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், பொதுமக்களிடம் இருந்து அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பெண்ணின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், அவர்களுக்கு உரிய அறிவுரைகளையும், எச்சரிக்கையையும் வழங்கி அந்த பெண்ணை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

திமுக நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கை 110-ஆக அதிகரிப்பு; பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
சென்னை:தமிழகத்தில் இருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளை 110 மாவட்ட கழகங்களாக பிரித்து தி.மு.க






