திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா நேற்று (22.06.2023) ஸ்பெயின், பார்சிலோனோவில் திடக்கழிவுகளிலிருந்து பொருட்களைப் பிரித்தெடுக்கும் மையத்தின் செயல்பாட்டினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) திரு.சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.







