சென்னை:
சென்னை சைதாப்பேட்டை மஸ்ஜித் தோட்டம் வளாகத்தில் அதிமுக சார்பில ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக 169வது மேற்கு மாவட்ட செயலாளர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை.வி.என்.ரவி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சைதை கிழக்கு பகுதி செயலாளர் சைதை ஷேக் அலி முன்னிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் ரமலான் இப்தான் நோன்பை திறந்து வைத்தார். இதில் ஜவகர்அலி, சைதை சுகுமார், ஆலந்தூர் பசீர், கதிர் முருகன், கிண்டி கணபதி, கடும்பாடி பழனி, சுரேஷ், மோகன், கிருஷ்ணவேனி உள்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





