சென்னை:
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவாங்குவோரிடம் கூடுதல் பணம் வாங்குவதை தடுக்க ஸ்வைப்பிங் மிஷின் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் மது வாங்குவோரிடம் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக ரூ 10 வசூலிப்பதாக புகார் எழுந்தது. மேலும் இந்த 10 ரூபாய் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வசூலிக்கப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறும் காணொலி காட்சிகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
இந்த புகாரை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் ஸ்வைப்பிங் மிஷின் வைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து 4810 டாஸ்மாக் மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மிஷின் பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






