சென்னை:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, ரூ.47,320-க்கு விற்பனையாகி, புதிய உச்சத்தை தொட்டது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் உயர்ந்தும், குறைந்தும் காணப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை அதிகரித்தும் குறைவுதுமாக உள்ளது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,915-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.47,320-க்கு விற்பனையாகிறது.
அதேபோல ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ.1.00 அதிகரித்து ஒரு கிராம் ரூ.83.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.83,500 ஆக இருக்கிறது.






