மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் இன்று அடையாறு மண்டலம், தரமணி 100 அடி சாலையில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் தொடர்ந்து தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசல் மெளலானா கூடுதல் தலைமைச் செயலாளர்/ ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத்,பொது சுகாதார குழு தலைவர் டாக்டர் கோ.சாந்தகுமாரி, மண்டல குழு தலைவர் இரா துரைராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் மரு. செல்வவிநாயகம், கூடுதல் மாநகர நல அலுவலர் டாக்டர் லட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





