தனித்தமிழில் பெயர் சூட்டிய 3 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்: பாவலரேறு பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கனார்

சதுரங்கப்பட்டினம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் சதுரங்கப்பட்டினம் ஊராட்சியும் , கல்வி ஒளி நண்பர்கள் குழுவும் இணைந்து ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணி வரை 6.30 வரை கட்டணம் இல்லா திருக்குறள் வகுப்பு மற்றும் தமிழ்ப்பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது. 11.02.2023 அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் இவ்வகுப்பில் இதுவரை 50 குறட்பாக்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.
இந்த 50 குறட்பாக்களை ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா சதுரங்கப்பட்டினம் நூலக வளாகத்தில் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய உயர் அதிகாரி முனைவர்.சந்திர சேகரன் மற்றும்வித்யா சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
புதுப்பட்டினம் பாவலரேறு தமிழ்வழி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் தனித் தமிழில் பெயர் சூட்டியுள்ள மூன்று (இலக்கியா , முகிலன் , செந்தமிழன் ) மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தி.சம்பத் குமார் தனது சொந்த (75,000 ரூபாய் மதிப்பில் ) பணத்தில் மூன்று தங்கப்பதக்கம் ( ஒவ்வொன்றும் அரை பவுன் என மொத்தம் ஒன்றரை பவுன் ) வழங்கினார் .
இனி ஒவ்வொரு ஆண்டும் பாவலரேறு பள்ளியில் பயிலும் தனித்தமிழில் பெயர் சூட்டியுள்ள இரண்டு மாணவர்களுக்கும் , சதுரங்கப்பட்டினம் நூலகத்தில் நடைபெறும் திருக்குறள் வகுப்பில் பங்குபெற்று ஆண்டு இறுதியில் நடைபெறும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் இரண்டு மாணவர்களுக்கும் என மொத்தம் நான்கு மாணவர்களுக்கு அரைபவுன் எடையுள்ள நான்கு தங்கப் பதக்கங்களை வழங்க உள்ளதாக தலைமை ஆசிரியர் தி.சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனித்தமிழில் பெயர் சூட்டிய 3 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம்: பாவலரேறு பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கனார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.