தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. நடப்பு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் அவர் பணிநிறைவு (Superannuation) பெறவிருந்த நிலையில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், நிர்வாகத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது. மாநில அரசின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, வரும் செப்டம்பர் 1, 2026 முதல் பிப்ரவரி 28, 2027 வரை அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர் தலைமைச் செயலாளராகத் தொடர மத்திய அரசு தற்போழுது ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. சாய் குமார், புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை தங்கு தடையின்றிச் செயல்படுத்த இந்த நீட்டிப்பு பெரிதும் உதவும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 89: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டு. விளக்கம்:ஒருவரிடம் செல்வம்






