அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

தமிழக கோவில்களில் தமிழிலேயே குடமுழுக்கு செய்ய வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை

திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பதில் அளித்தது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஒய்.பி.இருதயராஜ், நுங்கம்பாக்கம், ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டுக்குழு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சையை பொறுத்தவரை மட்டும் கருவூரார் சித்தர் குடமுழுக்கு எப்படி செய்ய வேண்டும்? என்னென்ன மந்திரங்கள் சொல்ல வேண்டும்? என்பதையெல்லாம் விலாவாரியாக எழுதி வைத்துள்ளார் என்று அவர் வழி வந்துள்ள வாரிசான மூங்கிலடியார் அறிவிக்கிறார்.
திருமந்திரம் ஆகம விதிகளை விரிவாக எடுத்துரைக்கிறது. தமிழ் திருமுறைகள் இறைவனை எழுந்தருள செய்ய பாக்கள் பல செய்துள்ளது. தமிழில் குடமுழுக்கு பல்லாயிரக்கணக்கான கோயில்களில் ஏற்கெனெவே உலகம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது. நம்மூரில் தான் இன்னும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் நமது ஓதுவார்களை தமிழ் ஆசான்களை வைத்து குடமுழுக்கு நடத்திக்கொண்டிருக்கின்றனர். குடமுழுக்கு நடத்தும் வழக்கம் சம்ஸ்கிருத வேதத்தில் தான் இல்லை, கோயிலோ சிலை வழிபாடோ சம்ஸ்கிருத வேதத்தில் சொல்லப்படவில்லை. பிறகு ஆகமம் குடமுழுக்கு மட்டும் எப்படி அதில் வந்திருக்கு முடியும்? என்பது மில்லியன் டாலர் கேள்வி.
அது தமிழிலிருந்து மொழிபெயர்த்து சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது தான் ஆகமம் என்பது, ஆகமம் என்றால் சமஸ்கிருதத்தில் ‘வந்தது’ என்று பொருள். அதாவது தமிழிலிருந்து வந்தது என்று பொருள். உலகெங்கும் எல்லா மதத்தினரும் வழிபாட்டை தங்கள் தாய்மொழியில் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் . பௌத்தர்கள் இலங்கையில் சிங்களத்திலும், சீனாவில் சீன மொழியிலும், ஜப்பானில் ஜப்பானிய மொழியிலும் நடத்துகிறார்கள்.கிருத்துவர்களும் அப்படியே வழிபாடுகளை எபிரேயத்தில் (ஹீப்ரு) நடத்துவதில்லை.அவர்களது தாய் மொழியில் தான் நடத்துகிறார்கள்.அதிலும் சமஸ்கிருதம் ஒன்றும் தமிழ் கடவுளரின் மொழியும் அல்ல என்கிற போது , அதில் வழிபாடு நடத்துவது என்பது அனர்த்தம், ஆக்கிரமிப்பு.சமஸ்கிருதத்தை விட மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி.
ஆகவே இந்து கடவுள்களுக்கு கடவுள்கள் அறிந்த மொழி தமிழ் மொழி மட்டுமே. ஆகவே நாம் தமிழில் வழிபாடு செய்தால் கடவுளுக்கும் எளிதில் புரியும் என்பதுதான் நூறு சதவீதம் உண்மை .இதை யாராலும் மறுக்க முடியாது.தமிழுக்குப் பின்னால் எத்தனையோ ஆண்டுகள் கழித்து உருவான சமஸ்கிருதம். தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு கூட தெரியாது .
ஆனால், தமிழ் கடவுள் முருகன் கோவில்களில் கூட சமஸ்கிருத மந்திரங்கள் மூலமே வழிபாடு நடக்கிறது. நாம் காலத்திற்கு ஏற்றபடி நமது தாய் மொழியான தமிழில் வழிபாடு நடத்தி. யாவருக்கும் புரியும் வகையில்.கடவுளை வழிபடுவது தான் சாலச் சிறந்தது. இது நமது சந்ததிகளுக்கும் மிகவும் நல்லது. அவர்கள் தங்களது வழிபாட்டை தாய்மொழியில் தெரிந்து கொண்டும், புரிந்து கொண்டும் வழிபடுவது தான் தலைசிறந்த ஒன்று என்பது எனது பணிவான கருத்து. ஆகவே கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்வதுதான் சாலச் சிறந்தது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

தமிழக கோவில்களில் தமிழிலேயே குடமுழுக்கு செய்ய வேண்டும்: இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர