உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு சாா்பில் சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் தொடர் முழக்கக் கூட்டங்கள் நடைபெற்றன. அதில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னவென்றால்.
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக !
தமிநாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றிடுக !
மேலும் ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த தொடர் முழக்க கூட்டத்தின் கோரிக்கை:-
1. நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைகள் தெளிவுபடுத்தியபடி உச்சநீதிமன்றத்தின் கருத்தும் கேட்பிற்கு
அனுப்பாமல் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 348(2) இன் படி தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக
அக்கிட தமிழ்நாடு அரசின் கோப்பினை நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இசைவு பெற்றிடுகு !
2. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரைத் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்றிட சிறப்புச் சட்டத்தினை
இயற்றிடுக!
இந்த தொடர் முழக்கக் கூட்டத்தில் பா.மா.க தலைவர் டாக்டர். அன்புமணி இராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினர் தொடக்க உரையாற்றினார். ஜி.இராமகிரஷ்ணன் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாா்க்ஸிஸ்ட்) நிறைவுரை ஆற்றினார்.
இந்த தொடர் முழக்கக் கூட்டங்கள் நவம்பர் 1,8,17,24 டிசம்பர் 1, 2023 காலை 11 மணி முதல் மாலை 5 மணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






