வழக்கறிஞர் தமிழ் ராசேந்திரன் வெளியிட்டுள்ள தகவலில், தமிழர்களுக்கு முருக ராஜ்ஜியம் போதும். ராமராஜ்ஜியம் வேண்டாம். தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் இவைகளுக்கு ஏற்ற தமிழ் மொழியில் வழிபாடு உடன் இணைந்த தமிழ் ஆன்மீகம் போதும். எங்களுக்கு சமஸ்கிருத ஆன்மீகம் வேண்டாம். என்பதே தமிழர்களின் ஆன்மீக முழக்கமாக இருக்க வேண்டும். எங்களுக்கு வழிகாட்டிகளாக திருவள்ளுவரும், வள்ளலாரும், எண்ணற்ற சித்தர்களும் இருக்கிறார்கள். இவர்களின் வழிகாட்டல் எங்களுக்கு போதும்.
நாங்கள் தமிழ் சமயத்தை சேர்ந்தவர்கள். எங்கள் வேத நூல்கள் திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திருமந்திரம், தொல்காப்பியம், பன்னிரு திருமுறைகள் உட்பட்ட தமிழில் மூல மொழியில் எழுதப்பட்ட நூல்களே எங்களது மறைகள் எங்களது வேதங்கள். எங்களுக்கு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்களை மொழி மாற்றம் செய்து ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அது எங்களுக்கு தேவையும் இல்லை.
எனவே தமிழர்கள் இந்துக்கள் அல்ல. தமிழர்கள். தமிழ் சமயத்தைச் சேர்ந்தவர்கள். இது தொடர்பான விரிவான தெளிவு பிறக்கும் வரை இந்து மதம் என்னும் ஒரு பெரிய வட்டத்துக்குள் தமிழ் சமயம் என்னும் தனித்தன்மை கொண்ட வட்டத்தை வைத்து நாங்கள் எங்கள் தனித்தன்மையை காத்துக் கொள்கிறோம். கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்துக்கள் எப்படி தாங்கள் இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும் தங்கள் சமயம் தனித்தன்மை கொண்டது என்றும் அரசு அனுமதி பெற்றுள்ளார்களோ அதே போல தமிழ்நாட்டில் உள்ள சிவனிய சைவ பெருமக்கள் பின்பற்றும் தமிழ் சமயம் தனித்தன்மை கொண்டது என்பதை நாம் நிறுவ வேண்டும்.
அதற்காக தமிழ் வழிபாடு, தமிழில் வாழ்வியல் சடங்குகள் போன்றவற்றை செய்து வருகிற சான்றோர்கள், ஆதீனங்கள், அருளாளர்கள், பீடாதிபதிகள், முன்வந்து உதவ வேண்டும். அப்போதுதான் தமிழுக்கு ஏற்றம் கிடைக்கும். தமிழருக்கு உயர்வு கிடைக்கும். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற நிலை வந்து சேரும் என்று வழக்கறிஞர் தமிழ் ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





