தினசரி பாதிப்பு 5வது நாளாக சரிவு- புதிதாக 1,331 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 1,839 ஆக இருந்த இந்நிலையில் இன்று பாதிப்பு 1,331 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த 4 ஆம் தேதி கொரோனா பாதிப்பு நிலவரப்படி பாதிப்பு 3,962 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 72 ஆயிரத்து 800 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,752 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 18 ஆயிரத்து 351 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 22,742 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 2,436 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் 3 பேர், டெல்லி, கர்நாடகாவில் தலா 2 பேர் உள்பட 11 பேரும், கேரளாவில் விடுபட்ட 4 மரணங்கள் என மேலும் 15 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு 5வது நாளாக சரிவு- புதிதாக 1,331 பேருக்கு கொரோனா

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.