அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று திமுக மீனவர் அணி மாநில துணை செயலாளர் முனைவர் நகரேத்
பசிலியான் அவர்கள் நேரில் சந்தித்து தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது கழக அமைப்புச் செயலாளரும் கன்னியாகுமாரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும்
முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம் M.L.A., உடன் இருந்தார்.