19.புறங்கூறாமை
ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது, தீதாகப் பேசாதிருத்தல்
==================================================================
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்
விளக்கம்:
ஒருவரைக் காணாத இடத்தில் அவரைப் பழித்துப் பேசி அவரைக் கண்ட இடத்தில் பொய்யாக நடித்து உயிர் வாழ்வதைவிட இறந்து போதல் அவருக்கு அநநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.






