25.அருளுடைமை
தொடர்பு கருதாமல் எல்லார் இடத்திலும் இரக்கம் காட்டுதல்.
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது –குறள் : 248
பொருளில்லாதவர், முயற்சியால் மீண்டும் ஒருக்கால் அதைப் பெற்றுப் பொலிவடைவர். ஆனால் அருளில்லாதவர் ஒருமித்த நிலையில் அழிந்தவர் ஆவர். பின்பு ஒருக்காலும் ஆக்கம் பெறமாட்டார்.






