இல்வாழ்க்கை
பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி இல்வாழ்வான் தனக்குக் கிடைத்துள்ள பொருளை விருந்து அளித்து உண்ணும் வாழ்க்கையை மேற்கொண்டால் அந்த வாழ்க்கை தடைப்படாமல் என்றும் செயல்படும் நல்வாழ்க்கையாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த வாழ்க்கை பிறர் பழிக்கு உட்படாத வாழ்க்கையாகும்.






