Posted On: 12 NOV 2025 5:54PM by PIB Chennai
திருச்சிராப்பள்ளியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்), முதலாவது தன்னிச்சையாக தணிக்கை செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சி திருச்சிராப்பள்ளி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் சிறப்பிற்கும் நிறுவன பொறுப்புணர்விற்கும் முழுமையான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.
இதுகுறித்து தெரிவித்த திருச்சிராப்பள்ளி ஐஐஎம்-ன் இயக்குநர் டாக்டர் பவன் குமார் சிங், இந்த தணிக்கை செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அறிக்கை மைல்கல்லை விட மேலானது என்றும், நம்பிக்கையின் அறிக்கை என்றும் குறிப்பிட்டார். வெளிப்படைத்தன்மை மூலம், திருச்சிராப்பள்ளி ஐஐஎம் மாணவர்களின் திறன்களைப் பற்றிய துல்லியமான நுண்ணறிவுகளுக்கு எங்கள் மீது நம்பிக்கை வைக்க முடியும் என்பதை பணியாளர் சேர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு நிரூபிக்கிறது என்றும் இந்த சாதனை ஒரு கூட்டு முயற்சி என்றும் அவர் தெரிவித்தார்.
கோடைகால வேலை வாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல்வேறு தளங்களில் 50-க்கும் மேற்பட்ட புதிய பணி சேர்ப்பாளர்களுடன் கலந்து கொண்டன.
முதுநிலை மேலாண்மை பிரிவு மாணவருக்கு ரூ.3.5 லட்சமும், முதுநிலை மேலாண்மை – மனிதவளம் பிரிவு மாணவருக்கு ரூ.2 லட்சமும் அதிகபட்சமாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுநிலை மேலாண்மை பிரிவுக்கான இறுதிக்கட்ட வேலை வாய்ப்பின் போது 189 நிறுவனங்களும், முதுநிலை மேலாண்மை – மனிதவள பிரிவுக்கான இறுதி கட்ட வேலை வாய்ப்பின் போது 40 நிறுவனங்களும் பங்கேற்றன.







