திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே சொத்து தகராறில் மாற்றுத்திறனாளி தாயை மகன் எட்டி உதைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தம்பியின் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு மூத்த மகன் தனது தாயிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
- ஆத்திரமடைந்த அந்த கொடூர மகன், கண் பார்வை இல்லாத தனது பெற்ற தாயை கன்னத்தில் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார்.
- இந்த மோதலில் தம்பியின் மண்டை உடைக்கப்பட்டு, அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- தகராறின் போது வீடும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளி தாயை மகன் கொடூரமாக தாக்கும் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.







