மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாணவர்கள் அச்சம்

மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாணவர்கள் அச்சம்

தெருவில் தாறுமாறாக ஓடிய திருமுருகன் மெட்ரிக்குலேசன் பள்ளி பேருந்து

மதுபோதையில் இருந்த ஓட்டுநர் அநாகரிகமாக பேசியதோடு எங்கு புகாரளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது இது திருமுருகன் மெட்ரிக்குலேசன் பள்ளி பேருந்து என ஆணவ பேச்சு

திருப்பூர் வடக்கு நெருபெரிச்சல் ஜீ என் கார்டன் பகுதியில் திருமுருகன் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது பாண்டியன் நகர் மேற்கு ஆசிரியர் காலணி பகுதியிலுள்ள வீதிகளில் திருமுருகன் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு சொந்தமான TN 39 AP 1699 என்ற பள்ளி பேருந்தை சுரேஷ் என்ற ஓட்டுநர் அதிவேகமாக தாறுமாறாக பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில் பேருந்து ஓட்டியதால் இப்பகுதியிலுள்ள பொது மக்கள் இதை கண்டு அச்சமடைந்த நிலையில் பேருந்தை நிறுத்திய போது நிறுத்தாமல் வேகமாக சென்ற நிலையில் பொது மக்கள் இளைஞர்கள் துரத்தி பிடித்தனர்.

அப்போது மது போதையில் இருந்த பேருந்து ஓட்டுநர் சுரேஷ் என்பவர் மது போதையில் ஆபாசமாக பேசியதோடு தன்னை ஒன்றும் செய்ய முடியாது தன் மீது எங்கு புகாரளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது இது திருமுருகன் மெட்ரிக்குலேசன் பள்ளி பேருந்து என ஆணவ பேசி இரவு 2 வரை பேருந்து ஓட்ட சொல்கிறார்கள் என்றும் காலை மதுபோதையில் இருந்த போதிலும் உடனடியாக பேருந்தை இயக்கி மாணவர்களை அழைத்து வர வேண்டுமென திருமுருகன் பள்ளி நிர்வாகம் நிர்பந்தம் செய்வதாக தெரிவித்து வருகின்றார்.

திருமுருகன் மெட்ரிக்குலேசன் பள்ளி பேருந்தை சுரேஷ் ஓட்டுநர் பள்ளிகுழந்தைகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை இயக்கியிருக்கிறார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாலையோரம் நின்றிருந்த நான்கு சக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதிஷ்டவசமாக பேருந்தில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதே பள்ளியை சேர்ந்த ஓட்டுநர்கள் ஏற்கனவே இருமுறை மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் விபத்து நிகழ்ந்திருக்கிறது. இதனால் மது அருந்தாத ஓட்டுநர்களை நியமித்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாணவர்கள் அச்சம்

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை