தூத்துக்குடியில் திருநங்கைகள் மாற்றுதிறனாளி ஆகியோருக்கான ‘ஒதுக்கப்பட்டவர்களை அரவனைத்த கலைஞர்‘ என்ற தலைப்பிலான கருத்தரங்கு 17ஆம் தேதி நடைபெறும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தரங்கில் சட்டபேரவை உறுப்பினர்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.சி சண்முகையா மேயர்.ஜெகன் பெரியசாமி துணை மேயர் ஜெனிட்டா. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பிரம்மசக்தி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். இக்கருத்தரங்கில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்பட்ட கட்சி நிா்வாகிகள் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு தறைகளில் சாதித்த திருநங்கைகள் மற்றும் மாற்றுதிறனாளிகளை கௌரவித்து விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்சியில் திருநங்கைகள் மாற்றுதிறனாளிகள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கெள்கிறேன் என அமைச்சர் கீதா தெரிவித்தார்.






