தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசுபோட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “கல்லூரி படிப்பை முடித்து அல்லது இறுதி ஆண்டு பயிலும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களுக்கு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். வாயிலாக நடைபெற இருக்கிறது.






