திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பில்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது62)என்பவரின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனை சீரமைப்பதற்காக குழாய் அருகில் சுமார் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டினார். அப்போது மண்வெட்டிபட்டு உலோக சத்தம் வந்துள்ளது.
பதறிபோன அவர், சிறிய வடிவிலான உலோகப்பெட்டி புதைந்து இருந்ததை கண்டார். அதை திறந்து பார்த்தபோது பழமையான பெருமாள் சிலை ஒன்று, ஆண்டாள் சிலை இரண்டு, கருடன் சிலை ஒன்று, தெய்வ சிலை ஒன்று, உலோகத்தால் ஆன ருத்ராட்சம் ஐந்து, மூடியுடன் கூடிய சொம்பு, மகாலட்சுமி சிலை மற்றும் வட்ட வடிவில் தாளம் 2 போன்றவை இருந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக செல்வராஜ் பேரளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக நன்னிலம் வட்டாட்சியருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் அனைத்தும் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலைகள் என்றும், இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. தொல்லியல் துறையினர் இந்த சிலைகளை நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகே சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தது அதன் உண்மையான மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தெரியவரும்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





