மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில் பொது மக்கள் விழிப்புணர்வுக்காக நாம் தினந்தோறும் சந்திக்கும் நோய்கள் பற்றிய சந்தேகங்கள் மற்றும் அதன் விளக்கம் கொண்ட தகவல் ஏட்டினை வெளியிட்டார். இந்நிகழ்வில் முதன்மைச் செயலாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் ம.கோவிந்தராவ், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன், பேராசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவக்கல்லூரி உயரலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





