சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்தது… சிறிய மழைக்கே தாங்காத சென்னை பெருமழை பெய்ததால் ஸ்தம்பித்து போயின. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாதபடி மக்கள் தங்கள் இடங்களிலேயே முடங்கினர்… அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் இயங்காத நிலையில் ஒரு இயங்கிய சில நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பேருந்தில் செல்வதற்காக வந்தபோது பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்துகள் கிடைக்கவில்லை… இதனால் ஏமாற்றமடைந்து வீடு திரும்பினர்…
புயல் கரையை கடந்த நிலையில் இன்றும் சாலைகள் ஆங்காங்கே மழை நீரால் செல்ல முடியாதபடி துண்டிக்கப்பட்ட நிலையில் எங்கெங்கு சாலைகள் சரியாக உள்ளதோ அங்கு மட்டுமே ஒருசில பேருந்துகள் இயங்கின.. மற்ற பேருந்துகள் பேருந்து நிலையங்களிலும், பணிமனைகளிலும் முடங்கிகிடந்தன…

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





