பல்லடம்: பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டப்பாளையம் கிராம பகுதிகளில் சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதாகவும் இது குறித்து புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக பொதுமக்கள் கூறினார். இதுகுறித்து கோட்ட பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்ததாவது:- கோட்டப்பாளையம் பகுதியில் எப்போதும் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் மிகக் குறைந்த அளவே விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை. இங்கு வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருகிறோம். மேலும் இங்குள்ள கிணறுகளில் சப்பைத் தண்ணீர் உள்ளது. அதனை எடுக்க சுமார் 5 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு சரியான நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






