புதுடெல்லி,
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், “அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் இந்த பண்டிகைக் காலம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், சமாதானத்தையும், அன்பையும் தரட்டும். கிறிஸ்துமஸ் விழாவின் அடையாளங்களான நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானத்தை போற்றுவோம். அனைவரும் மகிழ்ச்சி மற்றும் உடல்நலத்துடன் இருக்கும் உலகை நோக்கி பயணிப்போம். இயேசு கிறிஸ்துவின் உன்தை போதனைகளை நாம் நினைவுகூருவோம்” என பிரதமர் மோடி தனது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.






