சென்னை மாநகராட்சியின் 138-வது வார்டு SM BLOCK கில் இருந்த ரேசன்கடை மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புதிய ரேசன் கடை அமைத்துதர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை எற்று 138-வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன், விருகம்பாக்கம் M.L.A AMV.பிரபாகர்ராஜா, நலசங்க நிர்வாகிகளுடன் லால் பகதூர் சாஸ்திரி தெருவில் புதிய கடைக்கான இடத்தை பார்வையிட்டு, அங்கு கடையை மாற்ற நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர். உடன் மாவட்ட துணை செயலாளர் வாசுகிபாண்டியன், வட்ட செயலாளர்கள் மு.அன்பழகன், சோ.செந்தில்குமார், இரா.செழியன், சபரி, பாபு, தேவா, கோபி உட்பட பலர் உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





