புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங் அவர்கள் “Interdisciplinary Art Practices: Problems and Possibilities” என்ற நூலை வெளியிட்டார். இந்த நூல் 2022-ஆம் ஆண்டு உலக நாடக தினக் கொண்டாட்டத்தின் பொழுது நடத்தப் பெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பாகும். முனைவர் கோ.ரா. இராசா ரவிவர்மா, (இணைப் பேராசிரியர், நிகழ்த்துக்கலை துறை, புதுவைப் பல்கலைக்கழகம்) அவர்கள் மேற்குறித்த கட்டுரைகளை தொகுத்தும் பகுத்தும் நூலாகப் பதிப்பித்துள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்துக்கலைத் துறையின் புலத்தின் டீன் பேராசிரியர் பெ. ஸ்ரீதரன், துறைத்தலைவர் முனைவர் சரவணன் வேலு, பயிற்றுநர் முனைவர் ப. முருகவேல், உதவிப் பேராசிரியர்கள் முனைவர் பவித்ரா, முனைவர் பிரியங்கா சர்மா மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





