சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் நேற்று மிகப் பழமையான வரலாற்றைத் தாங்கி நிற்கும் சிறப்பு வாய்ந்த புனித தோமையார் அவர்கள் தங்கி இருந்து அற்புதங்கள் செய்து வந்த புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயம் சுமார் 472 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறந்து இருப்பதோடு மட்டும் அல்லாமல் இத்தலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகைதரும் புனிதத் தலமாகும்.


இந்துக்கள் முஸ்லீம்கள் கூட வருடம் வருடம் வருகைதந்து அன்னை மாதாவிடம் முன்னின்று தங்களின் வேண்டுதல்களை முன்வைத்து வணங்கிடும் போது பிரார்த்தனையில் அற்புதம் நிகழ்வதாக பேசப்படுகிறது.
மக்களில் பலர் சின்னமலை புனித அன்னை ஆரோக்கிய மாதா திருவிழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் மக்களுக்கு பொது மக்களில் பலர் நீர், மோர் அன்னதானங்கள் வழங்கி சிறப்பித்தது வரும் காட்சிகள் இங்குக் காணமுடிகிறது.
சாலைகளில் இருபுறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளின் அணிவகுப்பு மக்களைக் கவர்ந்திடும் சிறப்பம்சமாகக் கருதி மகிழ்கின்றனர்.
இத்திருவிழாவை முன்னிட்டு பரங்கிமலை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திரு. மகி திருமதி. துளிசி, இளம் வழக்கறிஞர் ம. கிருத்திகா அவர்களது குடும்பத்தாரின் சார்பாகத் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் அ.இருதயராஜ் அவர்களின் தலைமையில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதில் உடன் இருந்து கலந்து கொண்ட செங்கல்பட்டு மாவட்ட தலைமை நிருபர் இரா.மு.அருண்குமார், புகைப்பட கலைஞர் சி சுகுமார், பல்லாவரம் தொகுதி நிருபர் ஆ விஜயன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.






