சென்னை மெரினாவில் கலைஞர் அவர்களுக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடலோர ஒழுங்குமுறை மண்டலமும் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் 2.23 ஏக்கர் பரப்பில் தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு, சென்னை மெரினா கடற்கரையி ல் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், நினைவிடம் கட்டப்பட்டு வருகிற இந்நிலையி ல், கருணாநிதியின் இலக்கியப் பணிகளைப் போற்றுகின்ற வகையில் மெரினா கடலில் அவருக்கு ரூ.81 கோடி செலவில், 134 அடி உயரத்தில் மிகப்பெரிய பிறம்மாண்ட நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.







