சென்னை:
சென்னை மகாபலிபுரத்தில் வருகிற 10ம் தேதி தேசிய மீன் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஸ்டார்ட் -அப் இந்தியா மையம் மற்றும் டிபிஐஐடி ஆகியவற்றுடன் இணைந்து மீன்வள சுற்றுச்சூழல் அமைப்பில் சிறப்பான தாக்கத்தை உருவாக்கும் ஸ்டார்ட்- அப் நிறுவனங்களை கண்டறிந்து, விருது வழங்கி, அங்கீகரிப்பதற்காக மீன்வள ஸ்டார்ட்-அப்களின் மகத்தான சாதனைகளை மீன்வளத் துறைத் தொடங்கியது. இந்தியாவில் மீன்வள சுற்றுச்சூழல் பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. தற்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மீன்வள ஸ்டார்ட்-அப்கள் உள்ளன.
மீன்வள ஸ்டார்ட்-அப் மகத்தான சவால் நான்கு பிரச்சனை அறிக்கைகளின் அடிப்படையில் விண்ணப்பங்களை கோரியது. இந்த சவாலுக்கு 121 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தீவிரமான ஆய்வுக்குப் பிறகு, 12 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்த சவாலின் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்கள் டாக்டர் எல்.முருகன் மற்றும் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் வருகிற 10ம் தேதில் நடைபெறும் தேசிய மீன் விவசாயிகள் தினத்தன்று கௌரவிக்கப்படுகின்றனர்.
பிரதான் மந்திரி மத்ஸய சம்பதா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து வளர்க்க உதவும் வகையில் ரூ. 2 லட்சம் ரொக்க நிதி உதவி வழங்கப்படும்.
இந்த விழாவில் நாடு முழுவதிலுமிருந்து 30 தனிச் சிறப்பு மிக்க ஸ்டார்ட்-அப்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இது நாட்டில் உள்ள மீன்வள புதுமையாளர்களில் சிறந்தவற்றைக் காட்சிப்படுத்துகிறது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்கள் தொழிலை மேலும் வளர்க்க உதவும் வகையில் நிர்வாக அமர்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





