சென்னை:
11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு, செம்மஞ்சேரி, ஆசியவியல் நிறுவன வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 153 ஆவது திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், தென் கொரிய குடியரசின் துணைத் தூதரகத் தலைவர் ஹூம் வோஞ்ஜே உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவர் பேராசிரியர் பொன்னவைக்கோ, ஆசியவியல் நிறுவன இயக்குநர் மற்றும் நிறுவனர் பேராசிரியர் ஜி.ஜான்சாமுவேல், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற துணைத் தலைவர்கள் இ.சுந்தரமூர்த்தி, அரசர் அருளாளர் (சிகாகோ) கற்பூர சுந்தரபாண்டியன், பேராசிரியர் உலகநாயகி பழனி மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






