மகாபலிபுரத்தில் 10ம் தேதி தேசிய மீனவர்கள் தின கொண்டாட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை:
சென்னை மகாபலிபுரத்தில் வருகிற 10ம் தேதி தேசிய மீன் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஸ்டார்ட் -அப் இந்தியா மையம் மற்றும் டிபிஐஐடி ஆகியவற்றுடன் இணைந்து மீன்வள சுற்றுச்சூழல் அமைப்பில் சிறப்பான தாக்கத்தை உருவாக்கும் ஸ்டார்ட்- அப் நிறுவனங்களை கண்டறிந்து, விருது வழங்கி, அங்கீகரிப்பதற்காக மீன்வள ஸ்டார்ட்-அப்களின் மகத்தான சாதனைகளை மீன்வளத் துறைத் தொடங்கியது. இந்தியாவில் மீன்வள சுற்றுச்சூழல் பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது. தற்போது 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மீன்வள ஸ்டார்ட்-அப்கள் உள்ளன.
மீன்வள ஸ்டார்ட்-அப் மகத்தான சவால் நான்கு பிரச்சனை அறிக்கைகளின் அடிப்படையில் விண்ணப்பங்களை கோரியது. இந்த சவாலுக்கு 121 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தீவிரமான ஆய்வுக்குப் பிறகு, 12 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்த சவாலின் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்கள் டாக்டர் எல்.முருகன் மற்றும் டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் வருகிற 10ம் தேதில் நடைபெறும் தேசிய மீன் விவசாயிகள் தினத்தன்று கௌரவிக்கப்படுகின்றனர்.
பிரதான் மந்திரி மத்ஸய சம்பதா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து வளர்க்க உதவும் வகையில் ரூ. 2 லட்சம் ரொக்க நிதி உதவி வழங்கப்படும்.
இந்த விழாவில் நாடு முழுவதிலுமிருந்து 30 தனிச் சிறப்பு மிக்க ஸ்டார்ட்-அப்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இது நாட்டில் உள்ள மீன்வள புதுமையாளர்களில் சிறந்தவற்றைக் காட்சிப்படுத்துகிறது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்கள் தொழிலை மேலும் வளர்க்க உதவும் வகையில் நிர்வாக அமர்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

மகாபலிபுரத்தில் 10ம் தேதி தேசிய மீனவர்கள் தின கொண்டாட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட