டெல்லி:
மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் இதயம் வலிக்கிறது என வருத்தத்தை பதிவு செய்த பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது என உறுதியளிக்கிறேன் என்று கண் சிவந்தார்.
மணிப்பூர் வன்முறையின்போ‘து 2 குக்கி இன பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்ற வந்த பிரதமர் மோடி அதுபற்றி பேசினார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தால் என் இதயம் வலிக்கிறது. இதயத்தில் கோபம் நிரம்பி வலிகிறது. இந்த சம்பவத்தில் எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். சட்டம் முழுவலிமையுடன் தனது கடமையை செய்யும். மணிப்பூர் மகளுக்கு நடந்த சம்வத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





