திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் தண்டுமாநகரில் உள்ள மதர் தெரேசா மாற்றுத்திறனாளிகள் சாதனையாளர் நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள், விருதுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நிறுவனர் கே.தேவி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பல்துறை சாதனையாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஜெ.முகிலாவிற்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





