இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்ற சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிட்டீஸ் திட்டத்தின் கீழ், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கான கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுப் பயிற்சியினை தொடங்கி வைத்து, கிரிக்கெட் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஜெனரேசன் நெக்ஸ்ட் கிரிக்கெட் அகாடமியின் இயக்குனர் ப்ரீத்தி அஸ்வினிடம் வழங்கினார். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், முதன்மைச்செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இந்திய நாட்டிற்கான பிரெஞ்சு நாட்டின் துணைத் தூதர் லிசா டால்பட் பாரே, நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





