மின் வணிகம் மற்றும் ஏற்றுமதி குறித்த பயிலரங்கை அஞ்சல் துறை நடத்தியது..

அஞ்சலக ஏற்றுமதி மையம் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அஞ்சல் துறை அறிவித்துள்ளது. தற்போது, 49 அஞ்சலக ஏற்றுமதி மையங்கள் மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றது. மேலும் 5 மையங்கள் விரைவில் செயல்படத் தொடங்க உள்ளன. இது தமிழ்நாட்டில் வணிகங்களுக்கான ஏற்றுமதி நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான ஒரு முயற்சியாகும். அஞ்சல் துறை சார்பாக ஆகஸ்ட் 28 அன்று காஞ்சிபுரத்தில் அஞ்சலக ஏற்றுமதி மையம் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. ஏற்றுமதி செயல் முறைகளை விளக்குவதற்காகவும் அஞ்சலக ஏற்றுமதி மைய சேவைகளின் வாய்ப்புகளை ஆராய்வதற்காகவும் தொழில் வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் குறிப்பாக பட்டு கைத்தறி ஆகியோரை இந்தப் பயிலரங்கம் ஒன்றிணைத்தது.

இந்தப் பயிலரங்கத்திற்கு, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் G.நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அஞ்சல்துறைத் தலைவர் B.P. Sridevi (அஞ்சல் மற்றும் வணிக மேம்பாடு) தமிழ்நாடு வட்டம், சென்னை மண்டல கூடுதல் வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் ராஜலட்சுமி தேவராஜ், N. ஸ்ரீதர், நிர்வாக இயக்குநர் கைத்தறி ஏற்றுமதி மற்றும் ஊக்குவிப்பு கவுன்சில் மற்றும் இராமநாதன், பட்டுப் பூங்கா, காஞ்சிபுரம் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை நகர மண்டல இயக்குநர் சோமசுந்தரம் வரபவற்புரையாற்றி விழாவினை துவக்கி வைத்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 150 ஏற்றுமதியாளர்கள் இந்தப் பயிலரங்கத்தின் மூலம் பயனடைந்தனர்.

அஞ்சலக ஏற்றுமதி மையம் ஏற்றுமதியாளர்களின் அனைத்து தேவைகளுக்குமான ஒரே இடமாக செயல்படுகிறது. ஏற்றுமதி தொடர்பான ஆவணங்கள், சுங்க நடைமுறைகள், பேக்கிங்கிற்கான (packing) விரிவான உதவி மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகளை வழங்குகிறது. இந்த மையங்கள் வணிகர்களுக்கு சர்வதேச வர்த்தகத்தின் சிக்கல்களை எளிதில் எதிர்கொள்ள வாய்ப்பளிக்கிறது.

இந்த மையங்கள், ஏற்றுமதி தொடர்பான சேவைகளை வழங்குவதன் மூலம், வணிகங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் மற்றும் அவர்களின் ஏற்றுமதி முயற்சிகளில் சுமூகமான செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. அஞ்சலக ஏற்றுமதி மையம் வழங்கும் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களை ஊக்குவிக்கின்றோம்.

அஞ்சலக ஏற்றுமதி மையம் மற்றும் அதன் சேவைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு https://www.indiapost.gov.in/ and https://dnk.cept.gov.in/customers.web/.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

மின் வணிகம் மற்றும் ஏற்றுமதி குறித்த பயிலரங்கை அஞ்சல் துறை நடத்தியது..

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு