முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவிலிருந்து மேயர் சுஜாதா வெளியேற்றப்பட்டார். முதல்வரின் பாதுகாவலர்களிடம் எவ்வளவோ சொல்லி வாக்குவாதம் செய்தும் பிரயோசனம் இல்லாமல் போனது. முதல்வரின் பாதுகாவலர்கள் மேயர் சுஜாதாவை விழாவில் இருந்து வெளியேற்றினார்கள்.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடந்தது. மதியம் 12:30 மணிக்கு இந்த விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த விழா தொடங்கி சிறிது நேரம் கழித்து மதியம் ஒரு மணிக்கு வேலூர் மேயர் சுஜாதா தாமதமாக விழா மேடைக்கு வந்தார்.
அப்போது முதல்வரின் பாதுகாவலர்கள் மேயர் சுஜாதாவை தடுத்து நிறுத்தினார்கள். விழா தொடங்கி விட்டதால் தயவுசெய்து நீங்கள் போய்விடுங்கள் என்று பாதுகாவலர்கள் கூறினார்கள். ஆனால் தான் மேடைக்கு போய் போக வேண்டும் என்று மேயர் சுஜாதா முதல்வரின் பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் முதல்வரின் பாதுகாவலர்கள் பிடிவாதமாக சுஜாதாவை அங்கிருந்து வெளியேற்றினார்கள்.
தன்னை அனுமதிக்காததால் மேயர் சுஜாதா ஆத்திரத்தில் சென்றார். முதல்வர் பங்கேற்கும் விழாவில் ஒரு மேயரே தாமதமாக வரலாமா என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர்.