சேலத்தில் பல்வேறு கட்சியினரை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் விழா, முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, பாஜ கூட்டணியில் இருந்து வந்தோம். ஆனால் தற்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம்.
அதிமுகவின் கொள்கை வேறு. எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்து கொடுத்த கொள்கையில் இருந்து அதிமுக என்றும் பின் வாங்காது. அதிமுகவில் சாதி, மத வேறுபாடு கிடையாது. இஸ்லாமிய மக்களுக்கு, எனது ஆட்சி காலத்தில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன். ஒன்றிய பாஜ அரசு, ஹஜ் பயணத்திற்கான நிதியை நிறுத்தி விட்டது இது ஒன்றிய பா.ஜா.க அரசு முஸ்ஸிம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். முன்னதாக, மசூதியில் இஸ்லாமியர்களுடன் எடப்பாடி பழனிசாமி தொழுகை நடத்தினார்.






