மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் : திமுக அறிவிப்பு…

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்ல என திமுக அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சத்தை எட்டி உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே வெறித்தனமாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நடைபெற் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில அறிவிப்புகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதோவது,  காங்கிரஸ் கட்சி மக்களிடம் கொள்ளையடித்து, அவர்களின் செல்வங்களை மோசடி செய்வோருக்கு வாரி வழங்கியதாக குற்றம்சாட்டியதுடன்,  நமது நாட்டின்  ‘தாய் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு விநியோகம் செய்ய’ காங்கிரஸ் விரும்புவதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில்,  “பழங்குடியின குடும்பங்களில் இருக்கும் வெள்ளி கணக்கிடப்படும். சகோதரிகளுக்கு சொந்தமான தங்கம், சொத்துக்கள் ஆகியவை அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  இதில் உங்களுக்குச் சம்மதமா? நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தைப் பறிமுதல் செய்ய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே அவர்களது ஆட்சியில்,   நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை என்று கூறப்பட்டதாக தெரிவித்தவர்,  அதிக குழந்தை பெற்றவர்களுக்கு,  நாட்டில் ஊடுருவியவர்களுக்கு சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா?” என்றவர்,  “தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று, பின்னர் மன்மோகன் சிங் அரசு ‘சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு’ என்று சொன்னதைப்போல பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

சகோதர, சகோதரிகளே, இந்த ‘அர்பன் நக்சல்’ எண்ணங்கள் உங்கள் தாலியைக் கூட விட்டு வைக்காது. அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள்,” என்றார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.  இந்த நிலையில்,  பிரதமர்  மோடி ‘நாட்டில் வெறுப்பு விதைகளை விதைத்து வருவதாகக்’ கூறியுள்ளது. மேலும் மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது.

இந்த நிலையில்,   இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை என  தெரிவித்துள்ளார். என்டிஏ கூட்டணி தோல்வியடையப் போவது உறுதி என்பதை தெரிந்ததே என்றும்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 63 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 63

பேட்ரிக் ஐ ஜோசப் அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

நேற்று இரவு 7:30 மணி அளவில் போரூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை

நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் தீயணைப்புப் பாதுகாப்பு வசதிகள் குறித்த தணிக்கை நடவடிக்கைகள் மூலம், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது

பாதுகாப்பு, அதற்கான சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில், ரயில்வே தீயணைப்புப் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், ரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்கவும், தற்போதைய தீயணைப்புப் பாதுகாப்பு அமைப்புகளை மதிப்பிடுவதையும், மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைக்  கண்டறிவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தத் தணிக்கை நடவடிக்கை, ரயில் நிலையக் கட்டடங்கள், மின்சார அமைப்புகள், குளிர்சாதன, காற்றோட்ட வசதிகள், அவசரக்கால வெளியேறும் வழிகள், தீயணைப்பு உபகரணங்கள், நீர் இருப்பு, பம்பிங் (நீரேற்ற) வசதிகள், ஸ்பிரிங்க்லர் (தானியங்கி நீர் தெளிப்பான்) அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். தீ விபத்துகள் உள்ளிட்ட அவசர நிலைகளை திறம்பட எதிர்கொள்ள ரயில் நிலையங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.நிர்ணயிக்கப்பட்ட தீயணைப்புப் பாதுகாப்பு, அதற்கான தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும், இந்தத் தணிக்கை மதிப்பிடும். இந்த தணிக்கையின் போது கண்டறியப்படும் குறைபாடுகள் அனைத்தும் உடனடியாக சீர்செய்தல் நடவடிக்கைகள் மூலம் சரிசெய்யப்படும்.பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட கூட்டு ஆய்வுக் குழுக்கள், இந்தத் தணிக்கைகளை மேற்கொள்ளும். தேவைப்படும் இடங்களில், சிறப்பு முகமைகள், மாநில தீயணைப்புத் துறைகளின் உதவியும் நாடப்படும். பாதுகாப்புத் தயார்நிலையை மேலும் வலுப்படுத்த, தணிக்கையின் போது கண்டறியப்படும் மேம்பாட்டுப் பணிகள், முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.ரயில்வே கட்டமைப்பு முழுவதும் பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து மேம்படுத்துவதில், இந்திய ரயில்வே உறுதியுடன் உள்ளது. இந்தத் தீயணைப்புப் பாதுகாப்புத் தணிக்கை முயற்சி, ரயில் நிலையங்களில் பாதுகாப்புத் தரநிலைகளை வலுப்படுத்துவதிலும், அவசரக்காலத் தயார்நிலையை மேம்படுத்துவதிலும், முக்கிய நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் : திமுக அறிவிப்பு…

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 63 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 63

பேட்ரிக் ஐ ஜோசப் அடிகளார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

நேற்று இரவு 7:30 மணி அளவில் போரூர் புனித சூசையப்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை

நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் தீயணைப்புப் பாதுகாப்பு வசதிகள் குறித்த தணிக்கை நடவடிக்கைகள் மூலம், பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது

பாதுகாப்பு, அதற்கான சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில், ரயில்வே தீயணைப்புப் பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், ரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்கவும், தற்போதைய தீயணைப்புப் பாதுகாப்பு அமைப்புகளை மதிப்பிடுவதையும், மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைக்  கண்டறிவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தத் தணிக்கை நடவடிக்கை, ரயில் நிலையக் கட்டடங்கள், மின்சார அமைப்புகள், குளிர்சாதன, காற்றோட்ட வசதிகள், அவசரக்கால வெளியேறும் வழிகள், தீயணைப்பு உபகரணங்கள், நீர் இருப்பு, பம்பிங் (நீரேற்ற) வசதிகள், ஸ்பிரிங்க்லர் (தானியங்கி நீர் தெளிப்பான்) அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். தீ விபத்துகள் உள்ளிட்ட அவசர நிலைகளை திறம்பட எதிர்கொள்ள ரயில் நிலையங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.நிர்ணயிக்கப்பட்ட தீயணைப்புப் பாதுகாப்பு, அதற்கான தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும், இந்தத் தணிக்கை மதிப்பிடும். இந்த தணிக்கையின் போது கண்டறியப்படும் குறைபாடுகள் அனைத்தும் உடனடியாக சீர்செய்தல் நடவடிக்கைகள் மூலம் சரிசெய்யப்படும்.பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட கூட்டு ஆய்வுக் குழுக்கள், இந்தத் தணிக்கைகளை மேற்கொள்ளும். தேவைப்படும் இடங்களில், சிறப்பு முகமைகள், மாநில தீயணைப்புத் துறைகளின் உதவியும் நாடப்படும். பாதுகாப்புத் தயார்நிலையை மேலும் வலுப்படுத்த, தணிக்கையின் போது கண்டறியப்படும் மேம்பாட்டுப் பணிகள், முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.ரயில்வே கட்டமைப்பு முழுவதும் பாதுகாப்புச் சூழலைத் தொடர்ந்து மேம்படுத்துவதில், இந்திய ரயில்வே உறுதியுடன் உள்ளது. இந்தத் தீயணைப்புப் பாதுகாப்புத் தணிக்கை முயற்சி, ரயில் நிலையங்களில் பாதுகாப்புத் தரநிலைகளை வலுப்படுத்துவதிலும், அவசரக்காலத் தயார்நிலையை மேம்படுத்துவதிலும், முக்கிய நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.