ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:
மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலும், மேல்முறையீட்டுக்கான கால அவகாசத்தை கொடுக்காமல் பதவியை பறிக்கக் கூடாது என சமூக ஆர்வலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “மக்கள் பிரதிநிதிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் தகுதி நீக்கம் செய்யப்படும் சட்டப்பிரிவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலும், அவர்களுக்கு மேல்முறையீட்டுக்கான கால அவகாசத்தை கொடுக்காமல் அவரின் பதவி பறிக்கப்படக் கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.