வேறுபாடுகள் இருந்தாலும் கருத்தியலுக்காக இணைந்துள்ளோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவது தொடர்பாக 15 எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று பாட்னாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த புதிய வியூகம் வகுக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின் செந்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி; இந்தியாவின் நிறுவனங்கள், அமைப்புகளின் குரலை பாஜக, ஆர்எஸ்எஸ் நெரித்து வருகின்றது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது ஒரு செயல்முறையாகும், இது இங்கிருந்து முன்னேறும். கார்கே மற்றும் நிதிஷ் கூறியபடி விரைவில் அடுத்த கூட்டம் நடைபெறும். அடுத்த கூட்டத்தில் இன்னும் ஆழமாக விவாதிப்போம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் செயல்பாடு இங்கிருந்து தொடங்கியுள்ளது. வேறுபாடுகள் இருந்தாலும் கருத்தியலுக்காக இணைந்துள்ளோம். நமக்குள் மன ஒற்றுமை இருக்கலாம், ஆனால் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.






