கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று விலைவாசி உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவி ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கட்டப்பன், கிருஷ்ணகிரி ஒன்றிய குழு தலைவர் அம்சராஜன், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கிருஷ்ணன், கன்னியப்பன், ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, சைலேஷ் கிருஷ்ணன், நகர செயலாளர்கள் கேசவன், விமல், மாவட்ட மாணவரணி மோகன், அம்மா பேரவை தங்கமுத்து, அ.தி.மு.க. நிர்வாகி ஜெகதீஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெருமாள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





