106 வயது மூதாட்டி ராம்பாய் சாதனை ! – 3 தங்கப் பதக்கங்கள் தடகளத்தில் வென்றார்…..

100 மீட்டர் ஸ்பிரிண்ட், 200 மீட்டர் ஸ்பிரிண்ட் மற்றும் குண்டு எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் 106 வயது மூதாட்டி ராம்பாய். டேராடூனில் யுவ்ராணி விளையாட்டு கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட 18-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்த சாதனை செய்தார் ராம்பாய் .

ஹரியாணா மாநிலம் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் உள்ள கத்மா கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்பாய். கடந்த 1917-ல் பிறந்தவர். மான் கவுரை பார்த்து விளையாட்டில் அவருக்கு ஆர்வம் வந்தது. இதந் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் விளையாட்டு பயிற்சியை ஈடுபட்டார். கடந்த ஆண்டு 45.40 நொடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து மான் கவுர் படைத்த சாதனையை முறியடித்தார். கடந்த 2017-ல் 101 வயதில் 100 மீட்டர் தூரத்தை 74 நொடிகளில் கடந்தார்.

தற்போது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் 3 தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். ஒவ்வொரு பிரிவிலும் 5 முதல் 6 போட்டியாளர்களை சந்தித்து இந்த பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.

தனது 41 வயதான பேத்தி ஷர்மிளா சக்வான் தடகள விளையாட்டில் மூத்த குடிமக்களின் பங்களிப்பு குறித்து சொன்னதன் பேரில், அதில் ஆர்வம் கொண்ட ராம்பாய், 104 வயதில் பயற்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வதோதராவில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கம் பதக்கம் அவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 106 வயதில் 3 தங்கம் வென்று உத்வேகம் அளிக்கிறார்” என ராம்பாயை புகழ்ந்தார் நடிகர் மாதவன்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

106 வயது மூதாட்டி ராம்பாய் சாதனை ! – 3 தங்கப் பதக்கங்கள் தடகளத்தில் வென்றார்…..

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி